ADDED : ஜூன் 14, 2024 04:44 AM

திருவாடானை: திருவாடானை அருகே கருமொழி கிராமத்தில் திருவேட்டை அய்யனார் மற்றும் முனிஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மஞ்சு விரட்டு நடந்தது. 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டதில் சில காளைகளை மட்டும் வீரர்கள் இடம்பெற்றனர்.
வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.