ADDED : ஜூலை 16, 2024 05:53 AM

பரமக்குடி : பரமக்குடி காளிதாஸ் நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நடந்த விழாவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பள்ளியில் எட்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
தாளாளர் கே.வி.எஸ்.சுதர்சன்பாபு தலைமை வகித்தார். சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், தலைமை ஆசிரியர் முரளி, முன்னாள் தலைமை ஆசிரியர் பூர்ணாச்சாரி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.