Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

ADDED : ஜூன் 14, 2024 02:54 AM


Google News
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நபார்டு மற்றும் ஊரக சாலை பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகம் பரமக்குடியில் உள்ளது. இங்கு நேற்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6:30 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.ஒரு லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள நபர்களிடம் நடத்தும் விசாரணை அடிப்படையில் மேலும் தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us