Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு

நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு

நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு

நயினார்கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்; நாளை அம்மன் தபசு

Latest Tamil News
நயினார்கோவில்: -பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழாவையொட்டி அம்மன் தேரோட்டம் நடந்தது.

நயினார்கோவிலில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது.

இங்கு ஆடிப்பூர திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று காலை அம்மன் தேரோட்டம் நடந்தது.

காலை 8:00 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தில் நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இதனை தொடர்ந்து நாளை(ஆக.8) காலை 8:00 மணிக்கு அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

இரவு மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.9 காலை 9:00 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us