Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தெப்பக்குளத்தில் எச்சரிக்கை பலகை அவசியம்

தெப்பக்குளத்தில் எச்சரிக்கை பலகை அவசியம்

தெப்பக்குளத்தில் எச்சரிக்கை பலகை அவசியம்

தெப்பக்குளத்தில் எச்சரிக்கை பலகை அவசியம்

ADDED : ஜூன் 11, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் விபத்தை தடுக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் சக்கர தீர்த்த தெப்பக்குளம் அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பிலான சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் மழைநீர் சேகரிப்பால் நிறைந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த கோடை மழையும் சக்கர தீர்த்தத்திற்கு கை கொடுத்துள்ளது.

இந்நிலையில் அதிக ஆழம் கொண்ட சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் ஆர்வமிகுதியில் சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் குளத்தில் இறங்கும் பொழுது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விழிப்புணர்வு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us