/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிதாக 7 அரசு பஸ்கள் இயக்கம் பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிதாக 7 அரசு பஸ்கள் இயக்கம்
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிதாக 7 அரசு பஸ்கள் இயக்கம்
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிதாக 7 அரசு பஸ்கள் இயக்கம்
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிதாக 7 அரசு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜூலை 28, 2024 11:57 PM
பரமக்கு : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சார்பில் ஏழு புதிய அரசு பஸ்கள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை வகித்து பி.எஸ்., 6 ரக ஏழு புதிய பஸ்களை துவக்கி வைத்தார். கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் டைம் பாசுக்கு எல்லாம் கொலை நடக்கிறது, என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசியது பற்றி நிருபர்கள் அமைச்சரிடம் கேட்டபோது, அவர் ஒரு காமெடி பீஸ், மத்திய அரசிடம் எங்கள் உரிமைகளை கேட்டு பெறுகிறோம் என்றார்.
புதிய பஸ்கள் சாயல்குடி முதல் சிதம்பரம், ராமநாதபுரம் டூராமேஸ்வரம், ஏர்வாடி டூ ஈரோடு, ராமேஸ்வரம் டூ திருச்சி, முதுகுளத்துாரில் இருந்து சிதம்பரம், சாயல்குடியில் இருந்து திருப்பூர் என செல்லும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டன.
விழாவில் பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மகேந்திர குமார், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, காரைக்குடி மண்டல பொது மேலாளர் இளங்கோவன் பங்கேற்றனர்.