Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

ADDED : ஜூலை 06, 2024 11:29 PM


Google News
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர்உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொண்டி அனிஷ்நகரை சேர்ந்தவர் அம்ஜத் அலி 55. இவருக்கு புதிய வீடு கட்ட அனுமதி வாங்குவதற்காக அவரின் உறவினர்கள் முகமது இப்ராம்ஷா 41, நைனா முகமது 40, ஆகியோர் தொண்டி பேரூராட்சி செயல்அலுவலர் மகாலிங்கத்தை அணுகினர். அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நைனாமுகமதுராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ஜூலை 4ல் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றும் ( தற்காலிக பணியாளர்) தொண்டிராஜ் 33, மட்டும் இருந்தார்.

அவரிடம் பணம் கொண்டு வந்திருப்பதாக நைனாமுகமது கூறிய போது என்னிடம் தாருங்கள் நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். தொண்டிராஜிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்த போது மறைந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தொண்டிராஜை கைது செய்தனர்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் செயல் அலுவலர் மகாலிங்கம் 55, இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் 51, ஆகியோரையும் கைது செய்தனர். செயல் அலுவலர் உட்பட மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்திரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us