Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் ரூ.70 லட்சம் அபராதத்துடன் விடுதலை 14 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் ரூ.70 லட்சம் அபராதத்துடன் விடுதலை 14 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் ரூ.70 லட்சம் அபராதத்துடன் விடுதலை 14 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேர் ரூ.70 லட்சம் அபராதத்துடன் விடுதலை 14 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ADDED : மார் 15, 2025 02:30 AM


Google News
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேருக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்து விடுதலை செய்தும் 14 பேருக்கு சிறைக்காவலை நீட்டித்தும் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து பிப்.,22ல் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் 4 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 28 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். 28 மீனவர்களுக்கும் தலா ரூ. 2.50 லட்சம் வீதம் (இந்திய மதிப்பில் ரூ.72,500) மொத்தம் ரூ.70 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.20.30 லட்சம்) அபராதம் விதித்து விடுதலை செய்தது. அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

* மார்ச் 6ல் பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒரு படகில் இருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று இம்மீனவர்களையும் போலீசார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை மார்ச் 21 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us