Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 100 நாட்டுக் கோழிகள் சமைத்து பட்டையில் அன்னதானம்

100 நாட்டுக் கோழிகள் சமைத்து பட்டையில் அன்னதானம்

100 நாட்டுக் கோழிகள் சமைத்து பட்டையில் அன்னதானம்

100 நாட்டுக் கோழிகள் சமைத்து பட்டையில் அன்னதானம்

ADDED : ஜூலை 23, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் வேப்பமரத்து பிள்ளை காளியம்மன் கோயில் 9ம் ஆண்டு ஆடி உற்ஸவ விழாவில் 100 நாட்டுக்கோழிகளை சமைத்து பனை ஓலை பட்டையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று மூலவர் வேப்பமரத்து பிள்ளை காளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்களால் வழங்கப்பட்ட முட்டையிடும் பருவத்தில் உள்ள 100 நாட்டுக்கோழிகள் அம்மனுக்கு முன்புறம் உள்ள பலிபீடத்தில் பலியிடப்பட்டன.

அவை பெரிய அண்டாக்களில் சமைக்கப்பட்டு பனையோலை பட்டைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us