/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ ஆலங்குடி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் ஆலங்குடி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
ஆலங்குடி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
ஆலங்குடி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
ஆலங்குடி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
ADDED : ஜூன் 21, 2024 02:39 AM

புதுக்கோட்டை:ஆலங்குடியில் உள்ள நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு சொந்த ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான கார்த்தி(30) என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம், ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் போது, கார்த்தி யுடியூபர் சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மோசடி வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கரையும் இரண்டாவது குற்றவாளியாக, அறந்தாங்கி போலீசார் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கர் நேற்று மதியம் 12:00 மணியளவில் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயபாரதி, சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமின் கிடைத்த பிறகு போலீசார் திரும்ப அழைத்துச் சென்ற போது, சவுக்கு சங்கர் தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காக தான் காவல்துறையை வைத்துள்ளது.
தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க மேற்கொள்ளாத விளைவு தான் 33 உயிர்களை பலி வாங்கியுள்ளது. கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என்று முழக்கமிட்டார்.
பின் சவுக்கு சங்கரை போலீசார் பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர்.