Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ பஸ் பயணியாக மாறி ஆய்வு செய்த அமைச்சர்

பஸ் பயணியாக மாறி ஆய்வு செய்த அமைச்சர்

பஸ் பயணியாக மாறி ஆய்வு செய்த அமைச்சர்

பஸ் பயணியாக மாறி ஆய்வு செய்த அமைச்சர்

ADDED : மே 22, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
பெரம்பலுார்:சென்னையில் இருந்து உளுந்துார்பேட்டை வரை அரசு பஸ்சில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர், டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணியரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிற்கு, தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்றார்.

அப்போது, திருநெல்வேலிக்கு புறப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணம் செய்த பயணியரிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, டிரைவர் சீட்டிற்கு பின் உள்ள சீட்டில் அமர்ந்த அமைச்சர், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் குறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உளுந்துார்பேட்டை வரை பயணம் செய்த அமைச்சர், பஸ்சிலிருந்து இறங்கி அவரது காரில், தன் சொந்த ஊரான அரியலுாருக்கு புறப்பட்டு சென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us