Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ தீர்ப்பு நாளில் விஷம் குடித்த போக்சோ குற்றவாளி சாவு

தீர்ப்பு நாளில் விஷம் குடித்த போக்சோ குற்றவாளி சாவு

தீர்ப்பு நாளில் விஷம் குடித்த போக்சோ குற்றவாளி சாவு

தீர்ப்பு நாளில் விஷம் குடித்த போக்சோ குற்றவாளி சாவு

ADDED : செப் 01, 2025 05:56 AM


Google News
பெரம்பலுார: போக்சோ வழக்கில் தீர்ப்பு நாளில் விஷம் குடித்தவர், தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பெரம்பலுார் மாவட்டம், கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 33; ஹோட்டல் மாஸ்டர். இவருக்கு, 14, 8 வயதில் மகன்கள், 10 வயதில் மகள் உள்ளனர். மனைவியை பிரிந்த ஆனந்த், சொந்த ஊர் வந்தபோது, மூத்த மகனிடம், போதையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார். குன்னம் போலீசார் போக்சோவில் ஆனந்தை கைது செய்தனர்.

பெரம்பலுார் மகிளா நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக., 26ல் ஆனந்த் குற்றவாளி என, அறிவித்தார். அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட இருந்த நாளில், வீட்டில் விஷம் குடித்து விட்டு, நீதிமன்றத்திற்கு வந்த ஆனந்த், தீர்ப்பின்போது மயங்கினார். அவரை போலீசார், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீர்ப்பு, 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த, 29ம் தேதி, ஆனந்துக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆனந்த் நேற்று உயிரிழந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us