Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ லாரி - வேன் மோதல்; 18 முருக பக்தர்கள் காயம்

லாரி - வேன் மோதல்; 18 முருக பக்தர்கள் காயம்

லாரி - வேன் மோதல்; 18 முருக பக்தர்கள் காயம்

லாரி - வேன் மோதல்; 18 முருக பக்தர்கள் காயம்

ADDED : மே 27, 2025 05:02 AM


Google News
மங்கலமேடு; பெரம்பலுார் அருகே வேன் மீது குறுக்கே வந்த லாரி மோதி, முருக பக்தர்கள் 18 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சாத்தனுாரைச் சேர்ந்த 20 பேர், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று காலை 4:00 மணிக்கு வேனில் புறப்பட்டனர். மேலுாரைச் சேர்ந்த சுரேஷ், 44, வேனை ஓட்டினார்.

சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், முருக்கன்குடி பிரிவு சாலையில் காலை 6:30 மணிக்கு, வேனும், குறுக்கே வந்த செங்கல் லோடு ஏற்றிய லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், வேனின் முன்பகுதி சேதமடைந்து, சங்கீதா, 34; மாரியம்மாள், 50; செல்லமுத்து, 61; மதியழகன், 12, ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்து, திருச்சி தனியார் மருத்துவமனையிலும், 12 முதல் 61 வயது வரை உள்ள, 14 பேர் லேசான காயமடைந்து, பெரம்பலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us