/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ துணை தாசில்தார் சஸ்பெண்ட் பெரம்பலுார் கலெக்டர் உத்தரவு துணை தாசில்தார் சஸ்பெண்ட் பெரம்பலுார் கலெக்டர் உத்தரவு
துணை தாசில்தார் சஸ்பெண்ட் பெரம்பலுார் கலெக்டர் உத்தரவு
துணை தாசில்தார் சஸ்பெண்ட் பெரம்பலுார் கலெக்டர் உத்தரவு
துணை தாசில்தார் சஸ்பெண்ட் பெரம்பலுார் கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 07, 2024 04:53 PM
பெரம்பலுார்:
பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில் அகிலா திருமண மண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கு தடையின்மை சான்று பெற திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜ், 55, பெரம்பலுார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் பழனியப்பன் மற்றும் கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த பழனியப்பன் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அவரை மருத்துவமனையில் சேர்ந்த தாசில்தார் சரவணனிடம், பழனிப்பன் தப்பியோடியது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் பெற்றனர். போலீசாரின் அறிக்கையின்படி, துணை தாசில்தார் பழனியப்பனை, சஸ்பெண்ட் செய்து பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் நேற்று உத்தரவிட்டார்.