Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டி நகர பகுதிகளில் மாத கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு! நகராட்சி சார்பில் தனி குழு அமைத்து அகற்ற நடவடிக்கை

ஊட்டி நகர பகுதிகளில் மாத கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு! நகராட்சி சார்பில் தனி குழு அமைத்து அகற்ற நடவடிக்கை

ஊட்டி நகர பகுதிகளில் மாத கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு! நகராட்சி சார்பில் தனி குழு அமைத்து அகற்ற நடவடிக்கை

ஊட்டி நகர பகுதிகளில் மாத கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு! நகராட்சி சார்பில் தனி குழு அமைத்து அகற்ற நடவடிக்கை

ADDED : ஜூன் 30, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
ஊட்டி; ஊட்டி நகரில் நகராட்சிக்கு சொந்தமான சாலையோர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, மாதக்கணக்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தனிக்குழு அமைத்து அவற்றை அகற்ற திட்டமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சீசன் சமயத்தில் ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்ததால், இ--பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சீசன் இல்லாத நேரங்களில், நாள்தோறும், 4,500 வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள் ஊட்டிக்கு வந்து செல்கின்றன.

ஊட்டி நகரில் முக்கிய இடங்களில் உள்ள நகராட்சி மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில், வார இறுதி நாட்களில் முறையாக வாகனங்களை நிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதனால், வாகனங்கள் நகரில் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், நகரில் உள்ள பல இடங்களில் சாலையோரங்களில் பல மாதங்களாக அகற்றப்படாத பல வாகனங்கள் உள்ளன. இவற்றாலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

நகருக்குள் வரும், 1800 வாகனங்கள்


இந்நிலையில், சமீபத்தில் ஊட்டி அரசு துறையினர் நடத்திய ஆய்வில், 'ஊட்டி நகரில் வணிக நிறுவனங்களுக்கு நாள்தோறும், 1800 இரு சக்கர வாகனம், கார், சரக்கு வாகனங்கள் வருகின்றன. இதில், 1200 வாகனங்கள் காலை நேரம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு, மாலையில் எடுத்து செல்கின்றனர்.

குறிப்பாக, கேசினோ சந்திப்பு, கமர்சியல் சாலை, ஏடிசி, அப்பர் பஜார், லோயர் பஜார், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், பழுதான மற்றும் இயங்கும் நிலையில் உள்ள, 500 வாகனங்கள் மாதக்கணக்கில் நிறுத்தப்படுகிறது. நகரில் ஏற்படும் அன்றாட போக்குவரத்து நெரிசலுக்கு இதுபோன்ற வாகனங்களும் முக்கிய காரணமாக உள்ளது,' என, தெரிய வந்துள்ளது.

தனி குழு அமைத்து அகற்ற நடவடிக்கை


இந்த பிரச்னை குறித்து, ஊட்டி நகராட்சியில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள், நகரின் பல இடங்களில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; அகற்றப்படாத பழுதாத வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். 'இத்தகைய வாகனங்களை பாரபட்சம் பாராமல் நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தினர்.

நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''ஊட்டி நகர மன்ற கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர் நகரின் பல இடங்களில் வாகனங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, இடையூறாக மாத கணக்கில் நிற்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர், வாகனங்களை அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் முறையாக அறிவிப்பு கொடுப்பர். அறிவிப்புக்கு பின் குறிப்பிட்ட நாளில் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us