/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'
குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'
குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'
குட்டிச்சுவராகி போன மக்களின் வரிப்பணம்: யார் வீட்டு அப்பன் சொத்து? அநியாயமா கிடக்குது 'செத்து'

பராமரிப்பில்லாத கட்டடங்கள்
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள்; அரசு தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் பராமரிப்பின்றி புதர் சூழ்ந்து காணப்படுகிறது. அதில், பல இடங்களில் அரசு ஊழியர்கள் குடியிருக்கும் கட்டடங்களும் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளன. அதில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அரசு தேயிலை தோட்ட நிறுவனத்துக்கு (டான்டீ) சொந்தமான பல குடியிருப்புகள், தேயிலை தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் வன விலங்குகளின் குடியிருப்பாக மாறி உள்ளன.
புதர் மண்டி கிடக்கும் அவலம்
இதனை மக்களுக்கு பயன்படும் வகையிலான திட்ட செயல்பாடுகளுக்கு மாற்ற அரசு துறையினருக்கு நேரம் இல்லை. மாவட்டம் முழுவதும் இது போன்று, 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் வீணாகி கிடப்பது குறித்து பெயரளவுக்கு கூட, மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டதாக தெரியவில்லை. மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்ட இத்தகைய அரசு கட்டடங்கள், புதர்மண்டி வீணாகி போகும் நிலையில், அதனை பயன்படுத்த அரசு துறைகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
கூடலுார்
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பேராசிரியர்கள் தங்குவதற்கு கட்டடம் கட்டப்பட்டு, 2020ல் திறக்கப்பட்டது. இதுவரை இந்த கட்டடம் எந்த பயன்பாடும் இன்றி காணப்படுகிறது. அரசு தேயிலை தோட்ட கழகத்திற்கு (டான்டீ) சொந்தமான நடுவட்டம் பாண்டியர், நெல்லியாளம், சேரங்கோடு, பாண்டியார் தோட்டங்களில் அலுவலகம் மற்றும் கள ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட பல கட்டடங்கள் பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது. இதனை, சீரமைத்து சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளாக மாற்றினால் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தின் கீழ் பகுதியில், நிவாரண மையம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில், இந்த மையத்தில் பேரிடர் நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர்.
பந்தலுார்
பந்தலுார் பகுதியில், அரசு தேயிலை தோட்ட கழகத்தின் கீழ் மட்டும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் பயன் இல்லாமல் பாழடைந்து வருகிறது. 'டான்டீ' அலுவலர்கள் குடியிருப்பு, வீணாகி வரும் நிலையில், அவற்றை பராமரித்து கள மேற்பார்வையாளர்களுக்கு ஒதுக்கீடு செய்தால் பயனாக இருக்கும்.