/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை வழித்தடத்தில் சோலார் மின் வேலிகள்.. மனித - விலங்கு மோதல் அதிகரிப்பு : அகற்ற வனத்துறை 'நோட்டீஸ்': தினமலர் செய்தி எதிரொலி யானை வழித்தடத்தில் சோலார் மின் வேலிகள்.. மனித - விலங்கு மோதல் அதிகரிப்பு : அகற்ற வனத்துறை 'நோட்டீஸ்': தினமலர் செய்தி எதிரொலி
யானை வழித்தடத்தில் சோலார் மின் வேலிகள்.. மனித - விலங்கு மோதல் அதிகரிப்பு : அகற்ற வனத்துறை 'நோட்டீஸ்': தினமலர் செய்தி எதிரொலி
யானை வழித்தடத்தில் சோலார் மின் வேலிகள்.. மனித - விலங்கு மோதல் அதிகரிப்பு : அகற்ற வனத்துறை 'நோட்டீஸ்': தினமலர் செய்தி எதிரொலி
யானை வழித்தடத்தில் சோலார் மின் வேலிகள்.. மனித - விலங்கு மோதல் அதிகரிப்பு : அகற்ற வனத்துறை 'நோட்டீஸ்': தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜூன் 15, 2025 09:42 PM

பந்தலுார்; 'பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் செக்சன்-17 நிலத்தில், ஆக்கிரமிப்பு செய்து சோலார் மின் வேலிகளை, 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்,' என, வனத்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.
கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா பகுதிகளில், வனத்துறைக்கு உட்பட்ட சர்ச்சைக்குரிய செக்சன்-17 நிலப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலங்களில் மக்கள் வீடுகள் கட்டி குடியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
அதே நேரம், இதே பிரிவு நிலங்களை அதிக அளவில் கையகப்படுத்தி, தோட்டங்களாக மாற்றி வருமானம் பார்த்து வரும் நபர்களும் அதிகரித்து வருகின்றனர். 'சர்ச்சைக்குரிய இந்த நிலத்தில் புற்களை கூட அகற்றக்கூடாது,' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
வீட்டு மனையாக விற்பனை
அதில், பிதர்காடு முதல் சோலாடி வரையிலான பகுதிகளில் செக்சன்-17 நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னாள் வன அலுவலர் சேவாசிங் பணியில் இருந்த போது அகற்றி கையகப்படுத்தினார்.
அவர் சென்ற பின்பு, ஆக்கிரமிப்பாளர்கள் அதே இடங்களை கையகப்படுத்தி வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வது; காபி தோட்டங்கள் உருவாக்கினர். இப்பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகள் வந்து செல்லும் முக்கிய வழித்தடங்கள் தடைபட்டுள்ளன. இதனை மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் வழி தவறி வந்த காட்டு யானை ஒன்று ஜோய் என்பவரை தாக்கியதில் உயிரிழந்தார். அப்போது,'யானை வழித்தடங்களில் உள்ள சோலார் மின் வேலிகளை அகற்றி, வன விலங்குகளின் வழித்தடங்களை காப்பாற்ற வேண்டும்,' என, பொதுமக்கள் வன அலுவலரிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து,'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது.
வேலிகளை அகற்ற 'நோட்டீஸ்'
இந்நிலையில், இப்பகுதியில் மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி, முகமது, கோசி பேபி, சிவராஜ், பிந்து ஆகியோர்களுக்கு, வனத்துறை 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது. வனச்சரகர் ரவி வழங்கிய இந்த நோட்டீசில், 'பொதுமக்களின் நலன் கருதி சோலார் மின்வேலிகளை அகற்ற வேண்டும். வருவாய் துறையினர் இதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில்,'செக்சன்-17 நிலப்பகுதியில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, சீரமைப்பு பணி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து, இந்த நிலப்பகுதி பாதுக்கப்படும். ஏற்கனவே இங்கு மரங்கள் வெட்டி கடத்தியது தொடர்பாக, வருவாய் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளதுடன், வி.ஏ.ஓ., ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வரும் நாட்களில் இப்பகுதிகளில் கண்காணிப்பு செய்து, யானை வழித்தடங்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.