/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவுஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு
ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு
ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு
ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு

அலட்சியமே காரணம்
தேயிலை தோட்டம் நடுவே கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்தில் விதிமீறல் நடப்பதாக, அப்பகுதி மக்கள் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். நடவடிக்கை இல்லை.
அச்சுறுத்தும் தடுப்பு சுவர்
காந்திநகர் பகுதிக்கு வந்த அமைச்சர்களிடம் மக்கள் கூறுகையில், 'ஊட்டி - மஞ்சூர் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின், 50 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர், அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மழை காலங்களில் இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அளித்துள்ளனர்.
விதி மீறல் இருந்தால் நடவடிக்கை
கலெக்டர் அருணா கூறுகையில், ''ஊட்டி அருகே காந்திநகரில் நடக்கும் கட்டுமான பணியின் போது, கழிப்பிட கட்டடம் சரிந்து விழுந்ததில் கட்டட இடிபாட்டில் சிக்கியதில், 6 பெண்கள் துரதிருஷ்ட வசமாக உயிரிழந்துள்ளனர். உடனே, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அந்த கட்டடத்தை ஆய்வு செய்து 'சீல்' வைத்துள்ளனர். தவிர, மாவட்டத்தில் பிற பகுதிகளிலும், 48 விதி மீறிய கட்டடங்கருக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் கட்டட விதிமீறல் இருந்தாலும், புகார் அளித்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்த பகுதியிலும் மீண்டும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.