Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பசுந்தேயிலைக்கு ரூ.17.29 விலை நிர்ணயம்

பசுந்தேயிலைக்கு ரூ.17.29 விலை நிர்ணயம்

பசுந்தேயிலைக்கு ரூ.17.29 விலை நிர்ணயம்

பசுந்தேயிலைக்கு ரூ.17.29 விலை நிர்ணயம்

ADDED : ஜூன் 01, 2025 10:15 PM


Google News
குன்னுார்:

நீலகிரி மாவட்டத்தில் மே மாதத்திற்கான, பசுந்தேயிலை கிலோவிற்கு, 17.29 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை மையம் மற்றும் 'இன்கோசர்வ்' மையத்தில், ஏலம் விடப்படும், தேயிலை துாள் விலையின் அடிப்படையில் மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த தேயிலை துாள் அந்தந்த மாதத்தில் நடக்கும் ஏலம் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலை விலையை, குன்னுtரில் உள்ள தேயிலை வாரியம், நிர்ணயம் செய்து வருகிறது.

தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில், ''தேயிலை, 30 ஏ 5 (ஏ) பிரிவின் மார்க்கெட் கட்டுப்பாடு இரண்டாவது திருத்தம் அடிப்படையில், மே மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 17.29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையை, அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும். இதனை தென்னிந்திய தேயிலை வாரிய அனைத்து கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர்கள் கண்காணிப்பர்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us