Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை

விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை

விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை

விபத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை

ADDED : ஜூன் 01, 2025 11:29 PM


Google News
கோத்தகிரி : கோத்தகிரி இருப்புகல் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 44. இவருக்கு, மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் கோத்தகிரியில் இருந்து, தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, கிருஷ்ண புதுார் வளைவில் எதிரில் வந்த கார், அவர் மீது மோதியுள்ளது.

படுகாயம் அடைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us