Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'பிளாஸ்டிக்' பாட்டில் பயன்பாடு; சுற்றுலா பஸ்சிற்கு அபராதம்

'பிளாஸ்டிக்' பாட்டில் பயன்பாடு; சுற்றுலா பஸ்சிற்கு அபராதம்

'பிளாஸ்டிக்' பாட்டில் பயன்பாடு; சுற்றுலா பஸ்சிற்கு அபராதம்

'பிளாஸ்டிக்' பாட்டில் பயன்பாடு; சுற்றுலா பஸ்சிற்கு அபராதம்

ADDED : செப் 16, 2025 09:51 PM


Google News
ஊட்டி; ஊட்டியில் சுற்றுலா பஸ்சில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்ததால், 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், விதிமீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அவ்வப்போது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, விதிமீறி பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி, ஊட்டி நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சிபி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஊட்டி பஸ் ஸ்டாண்டிற்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலா பஸ்சை சோதனையிட்டனர். அதில், 60 தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர். 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us