/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை; களத்தில் 4 கும்கிகள்; வன ஊழியர்கள்; மருத்துவக் குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை; களத்தில் 4 கும்கிகள்; வன ஊழியர்கள்; மருத்துவக் குழுவினர்
யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை; களத்தில் 4 கும்கிகள்; வன ஊழியர்கள்; மருத்துவக் குழுவினர்
யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை; களத்தில் 4 கும்கிகள்; வன ஊழியர்கள்; மருத்துவக் குழுவினர்
யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை; களத்தில் 4 கும்கிகள்; வன ஊழியர்கள்; மருத்துவக் குழுவினர்
ADDED : செப் 18, 2025 11:43 PM

கூடலுார்: கூடலுார் ஓவேலியில், 12 பேரை கொன்ற காட்டு யானையை, மயக்க ஊசிசெலுத்தி பிடிக்கும் பணி நேற்று நிறைவு பெறவில்லை. நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், 'ராதாகிருஷ்ணன்' என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளில், 12 பேரை தாக்கி கொன்றது. அதனை பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவதற்கான உத்தரவை, மாநில முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, 15ம் தேதி வழங்கினார். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், வன ஊழியர்கள் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கை, 16ம் தேதி துவங்கினர்.
நேற்று காலை முதல் இப்பணியில். முதுமலை கும்கி யானைகள், வசிம், விஜய், சீனிவாசன், பொம்மன் ஆகியவை ஈடுபட்டுள்ளன. 'டிரோன் கேமரா' மூலம் காட்டு யானை இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இரு கால்நடை மருத்துவர்கள் தலைமையில், மயக்க ஊசி தயார் செய்யப்பட்டு, காலை முதல், மாலை வரை ஊசி செலுத்தும் முயற்சி நடந்தது. எனினும், செலுத்த முடியவில்லை. மாலை, 6:30 மணியுடன் இப்பணி நிறைவு செய்யப்பட்டது.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''யானையை பிடிக்கும் பணியில், 140 பேர் ஈடுபட்டுள்ளனர். மாலை வரை, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், மயக்க ஊசி செலுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், நாளை (இன்று) இப்பணி மீண்டும் தொடரும்,'' என்றார்.