Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தமிழக-கேரள இணைப்பு சாலையில் மண் சரிவு

தமிழக-கேரள இணைப்பு சாலையில் மண் சரிவு

தமிழக-கேரள இணைப்பு சாலையில் மண் சரிவு

தமிழக-கேரள இணைப்பு சாலையில் மண் சரிவு

ADDED : மே 30, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
பந்தலுார் : தமிழக-கேரளா இணைப்பு சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடலுாரில் இருந்து தேவர்சோலை வழியாக, கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையில், நெலாக்கோட்டை பஜார் அமைந்துள்ளது. இங்குள்ள தாழ்வான பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனை ஒட்டிய தாழ்வான நிலப்பகுதியில் தனிநபர் ஒருவர் வீடு கட்டுவதற்காக மண்ணை அகற்றியதால், மண்ணரிப்பு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதன் அருகே இருந்த மின் கம்பமும் விழுந்த நிலையில் உடனடியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டு பாதிப்பு தவிர்க்கப்பட்டது. நேற்று காலை உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன், மின்வாரியத்தினர் துரிதமாக செயல்பட்டு புதிய மின் கம்பத்தை நட்டு, மின் இணைப்பு வழங்கினர்.

சாலையின் கீழ் பகுதியில் தொடர்ந்து மண் சரிந்து வரும் நிலையில், தொடர் மழை பெய்தால் சாலை துண்டிக்கப்படும் அபாய நிலையில் காணப்படுகிறது. மேலும், கனரக வாகனங்கள் சென்றாலும் சாலையோரம் மண்சரிவு அதிகரித்து, தமிழக-கேரளா போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிக தேர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதியை, பேரிடர் கண்காணிப்பு குழு அலுவலர் சுரேஷ் கண்ணன், தாசில்தார்கள் சிராஜு நிஷா, செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்ரமணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சலீம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us