Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ரயில் பாதையில் மண்சரிவு; அகற்றிய ஊழியர்கள்

ரயில் பாதையில் மண்சரிவு; அகற்றிய ஊழியர்கள்

ரயில் பாதையில் மண்சரிவு; அகற்றிய ஊழியர்கள்

ரயில் பாதையில் மண்சரிவு; அகற்றிய ஊழியர்கள்

ADDED : அக் 22, 2025 10:35 PM


Google News
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கன மழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால், கடந்த 18ம் தேதியில் இருந்து மேட்டுப்பாளையம் -- ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் மேற்கொண்ட போதும், தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டது.

காட்டேரி, ரன்னிமேடு, ஹில் குரோவ் பகுதிகளில் நேற்று ரயில்வே பொது பணித்துறை ஊழியர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அகற்றினர். ஊட்டி-குன்னூர் இடையே மலை ரயில் பாதிப்பின்றி இயக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் பாறைகள், மண் சரிவுகள் அகற்றும் பணிகள் நடந்தன.

மழை தாக்கம் அதிகரிப்பதால் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. மழை பாதிப்பு இருப்பதால் நாளை (இன்று) ஒரு நாள் மலை ரயில் ரத்து செய்யப்படும்,''என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us