Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கொள்முதல் நிலையங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்வு

கொள்முதல் நிலையங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்வு

கொள்முதல் நிலையங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்வு

கொள்முதல் நிலையங்களில் பசுந்தேயிலை வரத்து உயர்வு

ADDED : ஜூன் 20, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பசுந்தேயிலை கொள்முதல் நிலையங்களில், வரத்து அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்த நிலையில், பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் அரும்பு துளிர்விட்டு, பசுந்தேயிலை வரத்து, படிப்படியாக வரத்து உயர்ந்து வருகிறது.

ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 15 முதல், 22 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப, விலை கிடைத்து வருகிறது. இடுபொருட்கள், தோட்ட பராமரிப்பு செலவு மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட செலவினங்கள் விவசாயிகளுக்கு அதிகமாக உள்ளதால், தற்போது கிடைத்துவரும் விலை, போதுமானதாக இல்லை.

கடந்த காலங்களில் ஒப்பிடுகையில், இந்த விலை விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துள்ள நிலையில், பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் அரும்புகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கூடுமானவரை, ஏஜென்ட்கள் வாயிலாக, பசுந்தேயிலையை பறித்து, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வினியோகித்து வருகின்றனர். இதனால், கொள்முதல் நிலையங்களில் வரத்து அதிகரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us