Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்

பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்

பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்

பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்

ADDED : ஜூன் 05, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
கூடலுார்; 'கூடலுார் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, காலை ஒரு மணி நேரம், கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்,' என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கூடலுார் நகரில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக இடையே செல்லும் வாகனங்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது, தொழிலாளர்கள் பணிக்கு செல்வதால் ஏற்படும் கூட்டத்தால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, பள்ளி நாட்களில் காலை, 8:30 முதல் 9:30 மணி வரை, நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தவிர்க்க, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், கோழிக்கோடு சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள் இரும்புபாலம் பகுதியிலும்; மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் மார்த்தோமா நகர் பகுதியில், காலை 8:30 மணிக்கு நிறுத்தப்பட்டன. போலீசாரின் நடவடிக்கையால் நகரில், போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

போலீசார் கூறுகையில், 'பள்ளி நாட்களில், மட்டும் காலை நேரத்தில் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கனரக வாகனங்கள் காலை ஒரு மணி நேரம் நகருக்குள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தி, கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us