Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காலையில் கடும் மேகமூட்டம்: வாகனங்கள் இயக்க சிரமம்

காலையில் கடும் மேகமூட்டம்: வாகனங்கள் இயக்க சிரமம்

காலையில் கடும் மேகமூட்டம்: வாகனங்கள் இயக்க சிரமம்

காலையில் கடும் மேகமூட்டம்: வாகனங்கள் இயக்க சிரமம்

ADDED : அக் 20, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
குன்னூர்: குன்னூரில், கடும் மேகமூட்டம் நிலவியதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவில் கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை கடும் மேகமூட்டம் நிலவியது: இதனால் வாகனங்கள் இயக்க டிரைவர்கள் சிரமப்பட்டனர்.

பலரும் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி வாகனங்களை இயக்கினர். சில நேரங்களில் முகப்பு விளக்குகள் பயன்படுத்தியும் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான மேகமூட்டத்தால், விபத்து அச்சத்தில் மெதுவாக இயக்கினர்.

தீபாவளிக்கு பொருட்களை வாங்க மக்கள் வந்தனர். லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தீபாவளி பட்டாசுகள் வெடிக்க சிரமம் ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us