/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்
தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்
தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்
தடை செய்யப்பட்ட சுரங்க பகுதிகளில் தொடரும் தங்க வேட்டை! உயிர் பலிகள் தொடர்ந்தும் அச்சமில்லாமல் அத்துமீறல்

சட்ட விரோத சுரங்கங்கள் அதிகம்
ஆனால், அதையும் மீறி அப்பகுதியை சேர்ந்த பலரும் கடந்த காலங்களில் பழைய தங்க சுரங்க குழிகளில் தங்கங்களை சேகரித்து வருகின்றனர். தற்போது, தேவாலா சுற்றுவட்டார பகுதிகளில், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான சுரங்கங்களை அமைத்துள்ளனர். அதன்பின், அங்கு கிடக்கும் தங்க படிமங்கள் உள்ள பாறைகளை உடைத்து, அவற்றை துகள்களாக மாற்றி, அதில் பாதரசத்தை கலந்து தங்க படிமங்களை தனியாக பிரித்து எடுக்கின்றனர்.
விதிமீறி செயல்படும் அரவை மில்கள்
இதற்காக தேவாலா மற்றும் பந்தலுார் பகுதிகளில், அரவை மில்கள் செயல்பட்டும் வருகிறது. இதுபோல் சட்ட விரோதமாக சுரங்க பாதைகள் அமைத்து உள்ளே செல்லும் பலரும், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.
கூலிக்கு ஆட்களை அமர்த்தி அத்துமீறல்
எனினும், தற்போது சிலர் சுரங்க குழிகளை சொந்தம் கொண்டாடி, அதில் தங்க படிமங்கள் சேகரிக்க கூலிக்கு வேலை ஆட்களை நியமித்தும் வருகின்றனர்.