Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோத்தகிரியில் புலி உலா வனத்துறை எச்சரிக்கை

கோத்தகிரியில் புலி உலா வனத்துறை எச்சரிக்கை

கோத்தகிரியில் புலி உலா வனத்துறை எச்சரிக்கை

கோத்தகிரியில் புலி உலா வனத்துறை எச்சரிக்கை

ADDED : மே 28, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
கோத்தகிரி:'கோத்தகிரி, கம்பட்டி கிராமத்தில் புலி நடமாடுவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கம்பட்டி கிராமத்தில், நேற்று காலை, 6:30 மணிக்கு, தேயிலை எஸ்டேட் வழியாக புலி வந்துள்ளது. சாலையில் நின்றிருந்த புலி, சற்று நேரம் நின்று, எஸ்டேட் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி அப்பகுதி, 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. இதுகுறித்த தகவலில், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர், குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'எப்பநாடு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி, இந்த பகுதிக்கு வந்து சென்றுள்ளது. கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புலி மீண்டும் வந்தால் தகவல் தர வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us