Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டு யானைகளால் அச்சம்: தேயிலை பறிக்க தடை

 காட்டு யானைகளால் அச்சம்: தேயிலை பறிக்க தடை

 காட்டு யானைகளால் அச்சம்: தேயிலை பறிக்க தடை

 காட்டு யானைகளால் அச்சம்: தேயிலை பறிக்க தடை

ADDED : டிச 01, 2025 01:52 AM


Google News
குன்னூர்: குன்னூர் அளக்கரை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், தேயிலை பறிக்க செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் கரன்சி , லேம்ஸ்ராக் பகுதிகளில் கடந்த வாரத்தில் இரு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.வனத்துறையினர் கண்காணித்து அளக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர். கோத்தகிரி பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் அளக்கரை தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ளது.

வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் தேயிலை பறிக்க செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யானைகள் உலா வருவது தெரியவந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.என, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us