/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை
ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை
ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை
ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; மின் தடை
போக்குவரத்து பாதிப்பு
நேற்று மதியம் கொளப்பள்ளியில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் மரம் அடியோடு பெயர்ந்து விழுந்ததில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மரம் அறுத்து அப்புறப்படுத்தப்பட்ட பின்பு, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தப்பட்டது. குந்தலாடி அருகே சாலையோர மரத்தின் கிளைகள் மின்கம்பியில் முறிந்து விழுந்ததில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்
இது குறித்து, டான்டீ நிர்வாகம் சார்பில் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின் சப்ளை துண்டித்து, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆற்றில் வெள்ள பெருக்கு
கூடலுாரில் தொடரும் மழையால், பாண்டியார் - புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்., பஜார் டெரஸ் சாலையில் மரம் விழுந்தது. நடுவட்டம் பேரூராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
ஆட்டோவின் மீது விழுந்த மரம்
ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் ஆட்டோவின் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. தீட்டுக்கல் பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் பாதிக்கப்பட்டதால், அங்கு மின் கம்பிகளை சீரமைத்து பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.