Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஏமாற்ற வேண்டாம்; ஏமாறவும் மாட்டோம் கொந்தளிக்கும் விவசாயிகள் சங்கம்

 ஏமாற்ற வேண்டாம்; ஏமாறவும் மாட்டோம் கொந்தளிக்கும் விவசாயிகள் சங்கம்

 ஏமாற்ற வேண்டாம்; ஏமாறவும் மாட்டோம் கொந்தளிக்கும் விவசாயிகள் சங்கம்

 ஏமாற்ற வேண்டாம்; ஏமாறவும் மாட்டோம் கொந்தளிக்கும் விவசாயிகள் சங்கம்

ADDED : டிச 01, 2025 01:54 AM


Google News
குன்னூர்: -தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும், மானியம் வழங்கி விவசாயிகளை ஏமாற்றும் செயலில் அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுப்ரமணி கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக தேயிலை விலை வீழ்ச்சி குறித்த தீர்வுக்கு நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

மத்திய, மாநில அரசுகள் இது நாள் வரை செவி சாய்க்கவில்லை. மத்திய வர்த்தக இணை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோரை நேரடியாக சந்தித்து முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் தங்களது கடந்த கால தேர்தல் நேரத்தில், வாக்குறுதிகளை அளித்தும் அதனை அடுத்த தேர்தல் நெருங்கும் வரை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் மேற்கொள்வதில்லை.

எதிர்வரும் தேர்தல் நேரத்தில் எப்போதும் போல, மானியம் என்ற போர்வையில் ஒரு சிறு தொகையை விவசாயிகளுக்கு வழங்கி, ஓட்டுக்களை பறித்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இந்த முறை விவசாயிகள் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும். நமது ஓட்டுரிமையை பயன்படுத்தி, உரிமையை நிலை நாட்ட வேண்டும். அனைத்து விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இம்முறை வாய்ப்பை தவற விட்டால் இனி, 5 ஆண்டுகள் காத்திருக்கும் அவல நிலை தொடரும்.

எனவே இம்முறை சிறு விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு, சுப்ரமணியம்கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us