Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காரை துவம்சம் செய்த யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி

காரை துவம்சம் செய்த யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி

காரை துவம்சம் செய்த யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி

காரை துவம்சம் செய்த யானை; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி

ADDED : செப் 07, 2025 09:08 PM


Google News
Latest Tamil News
மஞ்சூர்; மஞ்சூர்- --கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்த யானை ஆவேசமாக தாக்கியதில் கார் சேதமடைந்து, குழந்தையுடன் சென்ற தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மஞ்சூர் -கோவை சாலை கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி பகுதிகளில் சமீப நாட்களாக யானை கூட்டம் சுற்றி திரிகிறது. இந்த யானை கூட்டம் அந்த வழியாக செல்லும் அரசு பஸ்சை வழி மறிக்கிறது. தனியார் வாகனங்களை விரட்டி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் அடுத்த குந்தாபாலம் பகுதியை சேர்ந்த தீபக், 35, என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குந்தா பாலம் பகுதியில் இருந்து கெத்தைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மலைப்பாதையில் திடீரென கூட்டத்தில் சென்ற யானை ஒன்று பின்னோக்கி வந்து காரை வழிமறித்து ஆவேசமாக சப்தமிட்டவாறு தாக்கி காரை தள்ள முயன்றது. அப்போது கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து நொறுங்கி காருக்கு உள்ளேயும் வெளியேயும் விழுந்தன.

ஒரு சில வினாடிகளில் இந்த சம்பவம் நடந்ததால், காருக்குள் இருந்தவர்கள் சப்தம் போட்டனர். அப்போது, அந்த நேரத்தில் பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் சப்தம் போட்டதால் யானை ஒரு வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், குழந்தையுடன் காரில் இருந்த தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து குந்தா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us