ADDED : ஜன 02, 2024 10:43 PM
ஊட்டி:ஊட்டி அருகேயுள்ள சோலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரட்டி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்தது.
ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜ் தலைமை வகித்தார். சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்சாத், தலைவர் கவுரி, துணைத் தலைவர் பிரகாஷ்குமார், ஊர் தலைவர் ஹாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோக்கால், ஊரட்டி, கோட்டட்டி, டென்சாண்டல், தூபக்கண்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று, 500 மனுக்களை அளித்தனர்.