Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காலை உணவு திட்டம் ஆய்வு; மாணவர்களிடம் கருத்து கேட்பு

காலை உணவு திட்டம் ஆய்வு; மாணவர்களிடம் கருத்து கேட்பு

காலை உணவு திட்டம் ஆய்வு; மாணவர்களிடம் கருத்து கேட்பு


ADDED : டிச 25, 2024 07:59 PM

Follow on Google

ADDED : டிச 25, 2024 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவு திட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநில அரசு, காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி, பள்ளி மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, கோத்தகிரி வட்டார வளமைய பயிற்றுனர் செந்தில்குமார், ஒரசோலை அரசு நடுநிலை பள்ளிக்கு சென்று, உணவு தரத்தை ஆய்வு செய்தார். மேலும் உணவை உண்டு சோதித்து, மாணவர்களிடம் தரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உட்கூறுகளில், எண்ணும் எழுத்தும் மற்றும் முன் பருவக்கல்வி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, துாய்மை பணியாளர், 10 மாத நிலுவை தொகையினை, பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலையில், துாய்மை பணியாளர் தமிழ் செல்வியிடம் வழங்கினார். அதில், ஆசிரியைகள் கமலா, நளினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap