Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை

மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை

மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை

மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை

ADDED : ஜூன் 04, 2025 08:29 PM


Google News
கூடலுார்; முதுமலை, மசினகுடி அருகே, கரடி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை, மசினகுடி கோட்டம், மாயாறு வனப் பகுதியில் வன ஊழியர்கள் நேற்று முன்தினம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் கரடி இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் நேற்று, அதன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த கரடிக்கு, 10 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளது. அதன் பாலினம் குறித்து அறிய முடியவில்லை. மற்ற விபரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தெரிவிக்கப்படும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us