ADDED : ஜன 25, 2024 12:16 AM
சூலுார் : திருமூலர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில், விவசாயிகளை கவுரவிக்கும் விழா நடந்தது.
திருமூலர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில், விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கும் விழா சூலுாரில் நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் ஈஸ்வரன் பேசுகையில், உழவால் கிடைக்கும் உணவு பொருட்களை பிறருக்கு வழங்கும் விவசாயிகள் தான் விருட்சங்கள் ஆவர். பூச்சி மருந்துகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் எடுப்பதை விட, இயற்கை முறையில் விவசாயம் செய்தால் மண் வளம் பாதுகாக்கப்படும். நீரும், காற்றும் மாசுபடாது, என்றார். தொடர்ந்து, பொன்னாடைகள் அணிவித்து விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, டாக்டர் முத்து சரவணகுமார் உள்ளிட்டோர் பேசினர். அறக்கட்டளை தலைவர் பெருமாள்சாமி, பொருளாளர் நடராஜன், மணிமொழி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் தண்டபாணி, ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி, பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.