/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை? துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?
துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?
துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?
துார் வாராத நீரோடை; வெள்ளம் செல்ல தடை! நீண்ட கால பிரச்னைக்கு கிடைக்குமா விடை?

10 கி.மீ., நீரோடை பாதிப்பு
ஊட்டி அருகே எம்.பாலாடாவில் பல்லாயிரம் ஏக்கர் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு, மேல்கவ்வட்டி முதல் கப்பத்தொரை, எம்.பாலாடா, மணலாடா என, 10 கி.மீ., துாரம் கொண்ட பிரதான நீரோடை உள்ளது.
குன்னுார்
குன்னுார் ரேலியா அணை, டைகர் ஹில், வெலிங்டன் சுற்றுப்புற மலை பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், நீரோடைகளாக உருவெடுத்து ஆறுகளாக பவானிக்கு செல்கிறது. இந்த ஆறுகள் துார்வாரப்படாததால், செடிகள், புதர்கள் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.
கூடலுார்
கூடலுார் பகுதியில், ஏராளமான நீரோடைகள், ஆறுகள் உற்பத்தியாகின்றன. இவை அனைத்தும் கேரளா சாளியார் ஆறு மற்றும் பவானி ஆற்றின் கிளை ஆறான மாயார் ஆற்றில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றுநீர், கூடலுார், முதுமலை பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
கோழிக்கோடு
பள்ளிப்படி பகுதியில், நீரோடையின் வழித்தடத்தை மாற்றி இருப்பதுடன், நீரோடை செல்வதற்காக, சிமென்ட் குழாய்கள் அமைத்து அதன் மீது மண் நிரப்பி தங்கள் தேவைக்கு பலர் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை முழுமையாக சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்பதன் வாயிலாக நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்.
பந்தலுார்
பந்தலாரில் கபினியின் கிளை நதியான பொன்னானி ஆறு; சாலியாற்றில் கலக்கும் சோலாடி மற்றும் கோட்டூர் ஆறு ஆகியவை உற்பத்தி ஆகிறது. மழை காலங்களில் தண்ணீர் வழிந்தோட ஏதுவாக, இந்த ஆறுகளில் சில பகுதிகள் மட்டும் துார் வாரப்பட்டது. பல நீரோடைகள் துார் வாராமல் விடப்பட்டுள்ளதால், பெருக்கெடுக்கும் தண்ணீர் வழிந்தோட வழி இல்லாமல், சாலைகள் மற்றும் குடியிருப்புகள், தோட்டங்களில் நிறைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி தாலுகா பகுதி விவசாயத்தை நம்பியுள்ளது. மழை குறையும் பட்சத்தில், வறட்சி நாட்களில் ஓடை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில், பாண்டியன் பார்க், பனஹட்டி, குரு வேனு வெள்ளா நீர் பிடிப்பு பகுதி, குடிமனை நீரோடை, ஈளாடா நீரோடை மற்றும் கூக்கல்தொரை நீரோடை என, 10க்கும் மேற்பட்ட நீரோடைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.