Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ADDED : ஜன 25, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
அன்னூர், : தமிழகத்தில், நவோதயா பள்ளிகள் துவக்க வேண்டும். மும்மொழி கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் என்னும் பெயரில் உதவித்தொகை வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அறிவித்தது. இதன்படி அன்னூர் தபால் அலுவலகத்தில் நேற்று கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, செல்வன், நகரத் துணைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஜனாதிபதிக்கு 50 கடிதங்கள் அன்னூர் தபால் அலுவலகம் வாயிலாக அனுப்பப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us