Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறுத்தைகளை பிடிக்க தோடர் மந்தில் கூண்டு

சிறுத்தைகளை பிடிக்க தோடர் மந்தில் கூண்டு

சிறுத்தைகளை பிடிக்க தோடர் மந்தில் கூண்டு

சிறுத்தைகளை பிடிக்க தோடர் மந்தில் கூண்டு

ADDED : செப் 23, 2025 09:05 PM


Google News
Latest Tamil News
ஊட்டி, ; ஊட்டி தோடர் மந்து பகுதியில் உலா வரும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

ஊட்டி நகரில் சமீப காலமாக கரடி, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இரவு நேரங்களில் வனத்திலிருந்து நகருக்குள் வரும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள கார்டன் மந்து , கிளண்ராக் காலனி பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரண்டு சிறுத்தைகள் சுற்றி திரிகின் றன. இந்த சிறுத்தைகள், 20 வளர்ப்பு நாய்கள், சில தோடர் எருமை கன்றுக்குட்டிகளையும் வேட்டையாடியுள்ளன.

மேலும், இரவு நேரங்களில் தாவரவியல் பூங்கா அருகே உள்ள தோடர் பழங்குடி கிராம பகுதியில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 'சிறுத்தைகளை பிடிக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியதை அடுத்து, ஊட்டி வடக்கு சரக வனத்துறையினர் சிறுத்தைகளை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us