/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைபருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு வினியோகிக்க 4,494 மெட்ரிக் டன் உரம்! கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

உரம் இருப்பு விபரம்
மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் உர கடைகள் வாயிலாக விவசாயிகள் உரங்களை பெற்று வருகின்றனர். கடந்த மாத நிலவரப்படி, 'யூரியா -1392 மெட்ரிக் டன்; டி.ஏ.பி.,-- 297.95 மெட்ரிக்டன்; பொட்டாஷ் -647.35 மெட்ரிக் டன்; சூப்பர் பாஸ்பேட் -1042 மெட்ரிக் டன்; காம்பிளக்ஸ் -1114.6 மெட்ரிக் டன்,' என, 4494 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வினியோகம் குறித்து கண்காணிப்பு
இந்நிலையில், மாவட்டத்தில் உரம் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் விவசாயிகள் வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீதை கொடுக்க வேண்டும். உரங்கள் வாங்க வரும் விவசாயிகளை இணை பொருட்கள் வாங்க கட்டாய படுத்த கூடாது. உரங்களை விற்பனை செய்யும் போது உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.