Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மத்திய புவியியல் துறையினர் வருகை; விரிசல் பகுதியில் 20 நாட்கள் ஆய்வு

மத்திய புவியியல் துறையினர் வருகை; விரிசல் பகுதியில் 20 நாட்கள் ஆய்வு

மத்திய புவியியல் துறையினர் வருகை; விரிசல் பகுதியில் 20 நாட்கள் ஆய்வு

மத்திய புவியியல் துறையினர் வருகை; விரிசல் பகுதியில் 20 நாட்கள் ஆய்வு

ADDED : ஆக 06, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
கூடலுார் : கூடலுார் கோக்கால் அருகே, பூமி மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், ஆய்வுக்கு வந்துள்ள மத்திய புவியியல் துறையினர், 20 நாட்கள் அப்பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் மாதம், 27, 28ம் தேதிகளில், பெய்த கன மழையின் போது, 'ஒன்றரை சென்ட்' என்றழைக்கப்படும் குடியிருப்பு பகுதியில் வீடுகள் மற்றும் முதியோர் இல்ல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது.

விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், மத்திய நிலத்தியல் ஆய்வுத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மத்திய புவியியல் துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள், சென்னையிலிருந்து நேற்று மாலை கூடலுார் வந்தனர். அவர்கள் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'பூமி மற்றும் கட்ட டங்களில் விரிசல் ஏற்பட்ட பகுதிகளில், நாளை (இன்று) துவங்கும் ஆய்வுப்பணிகள், 20 நாட்கள் வரை நடைபெறும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us