Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பட்டாம் பூச்சி கணக்கெடுப்பு தன்னார்வளர்களுக்கு பயிற்சி

பட்டாம் பூச்சி கணக்கெடுப்பு தன்னார்வளர்களுக்கு பயிற்சி

பட்டாம் பூச்சி கணக்கெடுப்பு தன்னார்வளர்களுக்கு பயிற்சி

பட்டாம் பூச்சி கணக்கெடுப்பு தன்னார்வளர்களுக்கு பயிற்சி

ADDED : ஜூன் 29, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
கூடலுார்:முதுமலையில், பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள வன ஊழியர்கள், தன்னார்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்ட வனத்துறை, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு, இயற்கைக்கான உலகளாவிய நிதியம் சார்பில், பட்டாம் பூச்சிகள் கண்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.

இதற்கான பயிற்சி முகாம் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடந்தது.

வனச்சரகர்கள் விஜய், சிவகுமார், பாரத், இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் தலைவர் பாவேந்தன் ஆகியோர், பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு குறித்தும், வனப்பகுதியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில், வன ஊழியர்கள், கோவை வனக்கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us