Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூன் 25, 2024 02:03 AM


Google News
மேட்டுப்பாளையம்;ஊட்டி சாலையில் மரம் முறிந்து விழுந்ததில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு தினமும், மேட்டுப்பாளையம் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சுற்றுலா செல்கின்றனர். சாலையின் இரு பக்கம் மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.

ஊட்டி சாலையில், கன்னிமார் கோவிலுக்கும், கல்லாறு ரயில்வே கேட்டுக்கும் இடையே, தனியார் ஜாம் கம்பெனி அருகே, 50 ஆண்டு பழமையான, மே பிளவர் மரம் இருந்தது.

திடீரென காலை, 11:00 மணியளவில், இந்த மரம் முறிந்து, சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால், விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு, மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து போலீசார் சென்று, மரத்தை அறுக்கும் இயந்திரம் வாயிலாக அறுத்து, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பொக்லைன் இயந்திரம் வாயிலாக சாலையில் கிடந்த மரங்களை அகற்றினர்.

இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us