Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வயநாடுக்கு சென்ற வனத்துறை நிவாரண பொருட்கள்

வயநாடுக்கு சென்ற வனத்துறை நிவாரண பொருட்கள்

வயநாடுக்கு சென்ற வனத்துறை நிவாரண பொருட்கள்

வயநாடுக்கு சென்ற வனத்துறை நிவாரண பொருட்கள்

ADDED : ஆக 04, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
கூடலூர் : கூடலூர், ஓசூர் வனத்துறை சார்பில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து மீட்பு படையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் ஓசூர் வனத்துறை சார்பில், நேற்று, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்திலிருந்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில், பயிற்சி வன அலுவலர் அரவிந்த், உதவி வன பாதுகாவலர் கருப்பையா மற்றும் வன ஊழியர்கள் நிவாரண பொருட்களை வயநாடு பகுதிக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''வனத்துறை சார்பில் கோவை உள்ளிட்ட பிற வனக் கோட்டங்களில் இருந்தும், நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us