/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி
காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி
காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி
காற்றுடன் மழை...! மாவட்டத்தில் 10 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு அணைகளில் நீர் மட்டம் உயர்வால் மின்வாரியம் நிம்மதி
போக்குவரத்து பாதிப்பு
நேற்று முன்தினம் இரவு முதல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. பலத்த காற்றுக்கு மஞ்சூர் - கிண்ணக்கொரை சாலையில், 2 இடங்களில் மரங்கள் விழுந்தது. கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, மஞ்சூர் - ஊட்டி சாலையில் காந்திபேட்டை, தமிழக சாலை, மரவியல் பூங்கா, பிரீக்ஸ் சாலை, பர்ன்ஹில் உள்ளிட்ட, 10 இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுக்காவில், 8 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆபத்தான மரங்கள்
பொதுமக்கள் கூறுகையில், 'மாவட்ட முழுவதும் பெரும்பாலான பகுதியில் சாலையோர நுாறாண்டு பழமை வாய்ந்த மரங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் பலத்த மழைக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பலத்த காற்றை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலை, வனத்துறை இணைந்து அபாய மரங்களை கணக்கிட்டு அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல், அபாயகர மரங்கள் அகற்ற கோரி பொதுமக்களிடமிருந்து வரும் மனுக்களை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.