Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறியூர் மாரியம்மன் கோவிலில் வரும் 18ல் பூ குண்டம் திருவிழா

சிறியூர் மாரியம்மன் கோவிலில் வரும் 18ல் பூ குண்டம் திருவிழா

சிறியூர் மாரியம்மன் கோவிலில் வரும் 18ல் பூ குண்டம் திருவிழா

சிறியூர் மாரியம்மன் கோவிலில் வரும் 18ல் பூ குண்டம் திருவிழா

ADDED : மார் 14, 2025 10:24 PM


Google News
ஊட்டி; ஆண்டு தோறும் அருள்மிகு சிறியூர் மாரியம்மன் கோவிலில் மஹா பூ குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழாவை ஒட்டி வரும், 16ம் தேதி அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

17ம் தேதி மதியம் , 1:00 மணிக்கு பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி பிற்பகல், 3:00 மணிக்கு ஸ்ரீ மாசி கரியபண்ட அய்யன் அழைப்பு, 3:30 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 12:00 மணிக்கு நவதானிய பூஜை நடக்கிறது. 18ம் தேதி காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் ஒரு பகுதியாக, 17ம் தேதி இரவு, 8:00 மணிக்கு உயிலட்டி ஸ்ரீ சக்தி நாடக மன்றத்தால், 'உரி ஓகி சிரி பர்லி(கஷ்டங்கள் ஒழிந்து மகிழ்ச்சி பிறக்கட்டும்)' எனும் படுக சமூக நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கூக்கல் எட்டட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us