/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'ஷாக்' அடித்து இறந்த தாய்; அதே இடத்தில் மகனும் பலி 'ஷாக்' அடித்து இறந்த தாய்; அதே இடத்தில் மகனும் பலி
'ஷாக்' அடித்து இறந்த தாய்; அதே இடத்தில் மகனும் பலி
'ஷாக்' அடித்து இறந்த தாய்; அதே இடத்தில் மகனும் பலி
'ஷாக்' அடித்து இறந்த தாய்; அதே இடத்தில் மகனும் பலி
ADDED : ஜூலை 09, 2024 12:08 AM

குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி பகுதியை சேர்ந்தவர் மெஹ்ரூன், 71. இவரை கடந்த, 5 தேதி முதல் காணவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காட்டேரி அருகே புதர்கள் சூழ்ந்த பகுதியில் மாலை, 5:30 மணிக்கு, அவர் உடலை சிலர் கண்டனர்.
தகவலின் படி, தாயின் உடலை துாக்க சென்ற அவரது மகன் பைரோஸ் கான், 49, என்பவரும் கீழே விழுந்து துடித்தார். மின்சாரம் தான் தாக்கி இருக்க வேண்டும் என நினைத்த அக்கம்பக்கம் உள்ளவர்கள், உடனடியாக, மற்றவர்களை நெருங்க விடாமல் தடுத்தனர்.
தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குன்னுார் அரசு மருத்துவமனையில் பைரோஸ் கானை சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இறந்த பைரோஸ் கான், கோவை மாவட்டத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'இருவர் இறந்த அந்த பகுதியில் மின்சார, 'எர்த்' ஒயர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் மிதித்த தாய் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தார்.
'அவர் இறந்து கிடந்ததை பார்த்த மகன், அலறியடித்து தாயை துாக்கிய போது, மின்சாரம் தாக்கி அவரும் இறந்தார்' என்றனர்.
இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.