Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உச்சம் தொட்ட காய்கறி விலை ஊட்டியில் இல்லத்தரசிகள் கவலை

உச்சம் தொட்ட காய்கறி விலை ஊட்டியில் இல்லத்தரசிகள் கவலை

உச்சம் தொட்ட காய்கறி விலை ஊட்டியில் இல்லத்தரசிகள் கவலை

உச்சம் தொட்ட காய்கறி விலை ஊட்டியில் இல்லத்தரசிகள் கவலை

ADDED : ஜூன் 23, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
ஊட்டி;ஊட்டியில் அனைத்து வகையான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக உருளை கிழங்கு,பீன்ஸ்,கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பூண்டு, முட்டை கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் மலை காய்கறி அறுவடை குறைந்ததால் வரத்து குறைந்துள்ளது.

தற்போது, ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னுார் உள்ளூர் மார்க்கெட்டில், 'ஒரு கிலோ பீன்ஸ், 80 ரூபாய்; உருளைக் கிழங்கு, 80, கேரட், 55, பீட்ருட், 55, பட்டாணி, 140 மற்றும் பூண்டு, 240 ரூபாய்,' என, விலை உயர்ந்துள்ளது.

இதனால், மலை காய்கறிகளை பயிர் செய்த விவசாயிகளுக்கு, விலை உயர்வால் ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது.

அதே நேரத்தில், ஏழை கூலித் தொழிலாளர்கள் மலை காய்கறிகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us