Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காய்கறி விவசாயத்துக்கு பசுந்தாள் உரம் ஏற்றது

காய்கறி விவசாயத்துக்கு பசுந்தாள் உரம் ஏற்றது

காய்கறி விவசாயத்துக்கு பசுந்தாள் உரம் ஏற்றது

காய்கறி விவசாயத்துக்கு பசுந்தாள் உரம் ஏற்றது

ADDED : ஜூலை 10, 2024 10:30 PM


Google News
பெ.நா.பாளையம்- காய்கறிகள், சோளம், மக்காச்சோளம் உள்ளிட்டவைகளுக்கு பசுந்தாள் உரம் ஏற்றது என, வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

தரிசாக உள்ள நிலத்தில் மழையை பயன்படுத்தி, உழவு செய்து, பசுந்தாள் உர பயிர் விதைகளை விதைக்கலாம். அதை மடக்கி உழுவதால், மண்வளம் அதிகரிக்கும். மேலும், பசுந்தாள் பயிர்கள் சாகுபடிக்கு, ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ பசுந்தாள் விதைகளை விதைக்க வேண்டும்.

பின்பு, நன்கு வளர்ந்தவுடன், 45 நாட்களில் பூ பூக்கும் தருணத்தில் பசுந்தாள் உர பயிர்களை மடக்கி, உழ வேண்டும். பசுந்தாள் உர பயிர்கள் வளிமண்டலத்தின், நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் என்ற நுண்ணுயிர்களின் துணையுடன் மண்ணில் நிலை நிறுத்தும்.

பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கும். வயலில் அங்கக சத்து அதிகரிக்கும். மண்ணின் நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமாகி, மண்வளம் மேம்படும். மண்ணுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும், நுண்ணுயிர்கள் தரக்கூடியது.

மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாக நாம் பயிரிட்டு மடக்கிவிடும் பசுந்தாள் உரம் பயன்படுகிறது. மண் அரிப்பை தடுக்கும். நீர் பிடிப்பை அதிகரிக்கும். களை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என, பெரியநாயக்கன்பாளையம் துணை வேளாண் அலுவலர் விஜயகோபால் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us